ஜனாதிபதி சட்டத்தரணியாக பத்து பேர் நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரபல சட்டத்தரணிகள் பத்து பேரை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமித்துள்ளார். இந்நிலையில் அவர்கள் விரைவில் உச்ச நீதிமன்றத்தின் சம்பிரதாய அமர்வைத் தொடர்ந்து பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள். ஜனாதிபதியினால் பத்து சிரேஷ்ட சட்டத்தரணிகளான சமந்த வீரகோன், கலாநிதி அசங்க குணவன்ச, மொஹமட் அடமலி, ஹர்ஷ பெர்னாண்டோ, கலாநிதி சிவாஜி பீலிக்ஸ், பைசா மார்க்கர், கௌசல்யா நவரத்ன, உபுல் குமாரப்பெரும, விரன் கொரியா மற்றும் எராஜ் டி சில்வா ஆகியோரே மேற்படி ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.